மனித நேயம் மிக்க உயிர்காக்கும் விலை மதிப்பற்ற இரத்ததானம் பற்றிய சில உண்மைகள்
- மனித இரத்தத்திற்கு மாற்றுப்பொருள் கண்டுபிடிக்கப்படாததால் இரத்தத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரிது வருகிறது.
- இரத்ததானம் மன நிறைவைத்தரும் மனித நேயமிக்க ஒர் அருஞ்செயல்.
இரத்ததானம் எளிதானது, தீங்கில்லாதது. - முழு ஆரோக்கியமான 18 முதல் 60 வயது வரை, 45 கிலோ உடல் எடையுள்ள ஆண்களும் பெண்களும் இரத்ததானம் செய்யலாம்.
நமது உடலின் இரத்த ஓட்டத்திற்கு தேவையானதுபோக, சேமிப்பாக இருக்கும் இரத்தத்திலிருந்துதான் 350 மி.லி. இரத்தம் நாம் தானமாக அளிக்கின்றோம். - உடல் எடையில் ஒரு கிலோவுக்கு 8 மி.லி. இரத்தம் வீதம் தானம் அளிப்பது பாதுகாப்பானது. ஆகவே 45 கிலோ எடையுள்ள ஆணும், பெண்ணும் 350 மி.லி. தானமாக அளிக்கலாம்.
- இரத்ததானம் செய்தபின் நாம் உட்கொள்ளும் பழரசம், காபி போன்ற திரவப் பொருட்கள் நமது உடலின் திரவ நிலையை சமன் செய்கிறது.எனவே, இரத்ததானம் செய்தபின் நமது அன்றாடப் பணிகளை எந்தவித சிரமமின்றி வழக்கம்போல் தொடரலாம்.
- தானம் அளித்த இரத்தம் சில நாட்களில் தானாகவே நம் உடலில் ஈடு செய்யப்பட்டு விடும். அதற்கென்று தனியாக சிகிச்சைகளோ அல்லது உணவு உட்கொள்ளும் முறைகளில் மாற்றங்களோ தேவையில்லை.
- மூன்று மாதங்களுக்கு ஒரு முறை இரத்ததானம் அளிக்கலாம்.
- உணவு உட்கொண்டு 60 நிமிடதிற்குபின் இரத்ததானம் அளிக்கலாம்.
- இரத்ததானம் செய்யும் முன் இரத்த வங்கி வல்லுனர் உடல் ஆரோக்கியத்தை நன்றாகப் பரிசோத்திது, உடல் நலக்குறைவு இல்லை என்று உறுதி செய்தபின்புதான் நாம் தானம் அளிக்க அனுமதிப்பார்.
- இரத்ததானம் அளிக்கும் ஒருவருக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் சிரிஞ்சி (Syrinகெ) உபயோகப்படுதப்படும்.
- 100மி.லி. மனித இரத்தத்தில் இரும்புசத்தும், புரதச்சத்தும் கொண்ட ஹீமோகுளோபின் அளவு 12.6 கிராம் அளவு உள்ளவர்கள் இரத்ததானம் செய்யலாம்.
- தானமாக நாம் அளிக்கும் இரத்தம், அரசாங்க விதிகளின்படி பல பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நோய் கிருமிகளில்லாத இரத்தம் ஒவ்வொரு நோயாளியும் பெறுவதை உறுதி செய்கிறது.
- ஜாதி, மத ஏற்றதாழ்வுகள் இன்றி, இந்தியத் திருநாட்டின் ஒற்றுமையை பேணிக்காக்கும் இரத்ததானத்தில் நாம் நம்மை ஈடுபடுத்தி ஒரு புணிதப்பணியில் பங்குபெறுவொம்.
No comments:
Post a Comment